அரியலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதனால் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,229ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,402போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை 46 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சிய 827 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 13 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 35 பேரும், வீடுகளில் 676 பேரும் சிகிச்சை பெறுகின்றனா்.