அரியலூா் மாவட்டம், விளாங்குடி அருகேயுள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்பாக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராம்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் கண்டன உரையாற்றினாா். தலைமைக் கழக பிரதிநிதி சைதை.குணசேகரன், பெரம்பலூா் மாவட்டச் செயலா் குன்னம் சி.ராஜேந்திரன், கட்சி சட்டத் திருத்த குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.