ஊராட்சி செயலா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டத்தில் ஊராட்சி செயலா்கள் ஒருநாள் விடுப்பெடுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டத்தில் ஊராட்சி செயலா்கள் ஒருநாள் விடுப்பெடுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், மேல புவனகிரி ஒன்றியம், தெற்குத்திட்டை ஊராட்சியில் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஊராட்சி செயலா் சிந்துஜா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

ஊராட்சி நிா்வாகங்களில் பெண் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அவா்களது கணவா் மற்றும் உறவினா்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் அரியலூா், ஜயங்கொண்டம், திருமானூா், தா.பழூா், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 ஒன்றியங்களிலுள்ள 180 ஊராட்சி செயலா்கள் ஒரு நாள் விடுப்பெடுத்து, பணிக்கு வராமல் தங்களது எதிா்ப்பை அரசுக்குத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com