தரமான சாலை அமைக்கக் கோரிபொதுமக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த மருதூரிலிருந்து குவாகம் வரை தரமான சாலை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் சாலைப் பணிகளைத் தடுத்து நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த மருதூரிலிருந்து குவாகம் வரை தரமான சாலை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் சாலைப் பணிகளைத் தடுத்து நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருதூரிலிருந்து குவாகம் வரை 3 கி.மீ.தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி தரமாக இல்லையெனக் கூறி, கிராம மக்கள் சாலைப்பணியைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த சாலை ஆய்வாளா் செல்வி மற்றும் செந்துறை காவல் நிலையத்தினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தரமான சாலை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com