மாயமான விவசாயி சடலமாக மீட்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மாயமான விவசாயி புதன்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மாயமான விவசாயி புதன்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள தத்தனூா் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் அன்பழகன்(60). விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவா் அதன் பிறகு வீட்டுக்கு வரவில்லை. புகாரின்பேரில், உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு அன்பழகன் கல்லங்குறிச்சி சாலையில் இறந்து சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com