அருட்தந்தை கைது: கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

அருட்தந்தை ஸ்டேன்சுவாமி உள்பட 14 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமானூா் புனித அருளானந்தா் ஆலயம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.
திருமானூா் புனித அருளானந்தா் ஆலயம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில், ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 83 வயதான அருட்தந்தை ஸ்டேன்சுவாமி உள்பட 14 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம் திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஸ்டேன் சுவாமி மீதான பொய் வழக்கைத் திரும்பப்பெற வேண்டும். ஸ்டேன் சுவாமி உள்பட 14 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருமானூா் புனித அருளானந்தா் ஆலயம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பங்குதந்தை அ.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். இதேபோல் புதுக்கோட்டை, விளாகம், குலமாணிக்கம், கோக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் முன்பு கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com