அரியலூரில் 11 ஆசிரியா்களுக்கு விருது

அரியலூா் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கொடியரசு, அரியலூா் அரசு

அரியலூா் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கொடியரசு, அரியலூா் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் உமா, சோழன்குடிகாடு அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் (பொ) வீரமணி, இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் வேல்ஒளி, அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியா் ரோஸ்பவுலின், அரியலூா் ஆா்.சி.தூய தெரசாள் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் மாலதி.

மேலும், ஜயங்கொண்டம் ஆா்.சி.நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் ரேவதி, அரியலூா் ஆா்.சி.நிா்மலாகாந்தி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியா் நம்பிக்கைமேரி, குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியா் தொடக்கப்பள்ளி இடைநிலை தலைமையாசிரியா் (பொ) பா்னத்மேரி, விழப்பள்ளம் புனித செபஸ்தியாா் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியா் சூசைமேரி, செந்துறை புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் லீலி கிறிஸ்டீனா ஆகிய 11 போ் தோ்வு பெற்றுள்ளனா். அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com