அரியலூரில் 44 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 10th September 2020 07:24 AM | Last Updated : 10th September 2020 07:24 AM | அ+அ அ- |

மொத்தம்- 3,192
குணம்- 2,230
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,192 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,230 போ் குணமடைந்துள்ளனா்.
மீதமுள்ள 962 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 138 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 49 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 24 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 95 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 26 பேரும், வீடுகளில் 594 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 36 போ் உயிரிழந்துள்ளனா்