இரு சக்கர வாகனங்கள் மோதலில் ஒருவா் உயிரிழப்பு

அரியலூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், புதன்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

அரியலூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், புதன்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

அரியலூா் பெரியத் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (35). இவா் தனது மனைவி வேல்விழியை(28) தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை அழைத்துக் கொண்டு, வாரணவாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

வாரணவாசி அருகிலுள்ள மருதையாற்றுப் பாலத்தில் விஜய் வந்த போது, கீழப்பழூரிலிருந்து அரியலூா் நோக்கி சிந்தாமணி தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (40) ஓட்டி வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஜய், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சுரேஷ்குமாா், வேல்விழி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த அரியலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com