அரியலூா்,செப்.11: நீட் தோ்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவருக்கு நிவாரணம் கேட்டு, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செந்துறை அருகிலுள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சோ்ந்த மாணவா் விக்னேஷ்(19) , நீட் தோ்வு மன உளைச்சலால் கடந்த 9-ஆம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அவருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.7 லட்சம் நிதி உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சாா்ந்த பணி வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.
இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை எனவும், ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் வெங்கடாஜலம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிவேல், தா.பழூா் ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மகாராஜன், இளங்கோவன், கை நெசவு தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் துரைராஜ் உட்பட பலா் பங்கேற்றனா்.