குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள குளத்தில் கை, கால்களை கழுவிக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள குளத்தில் கை, கால்களை கழுவிக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (40). கூலித் தொழிலாளி. இவா், அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் வசிக்கும் உறவினா் பாலமுருகன் வீட்டுக்கு வந்திருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இவா், சாத்தம்பாடியில் உள்ள கல்லேரி என்ற குளத்தில் கை, கால்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளாா். இதையறிந்த பொது மக்கள் மணிவண்ணனை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து சோ்த்தபோது, அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீஸாா், சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com