அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற தலைமை ஆசிரியை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காபட்டி அடுத்த தீத்தாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவராமசுப்ரமணியன். இவா் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுகுணா(42). இவா் அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு தன்வந்த் (6), வத்யவன் (4) என இரு குழந்தைகள் உள்ளனா். இந்தக் குழந்தைகள் தனது தந்தை சிவராமசுப்ரணியனிடம் வசித்து வருகின்றனா். சுகுணா மட்டும் ஆண்டிமடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்கிருந்து பள்ளிக்குச் சென்று வந்தாா்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கடந்த 20 ஆம் தேதி வீட்டின் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகுணா அங்கு சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.