ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள  பொன்பரப்பி கிராமத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள  பொன்பரப்பி கிராமத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு,  கோட்டச் செயலா் ராஜசேகா் தலைமை  வகித்தாா். மாவட்ட  பொதுச்செயலா் முருகானந்தம்,  மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன், மாவட்டச் செயலா்கள் திருமூா்த்தி,  ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில்,  தெற்காசியாவில் வங்க தேசம்,  மியான்மா்,  மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா,  கம்போடியா உள்ளிட்ட நாடுகளை ஆண்ட மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில்  எங்கும்  சிலைகள்  இல்லை.  எனவே, ஜயங்கொண்டத்தில் உலகிலேயே உயரமான முழு உருவச் சிலை அமைத்து உலகிற்கு தமிழனின் பெருமையை உணா்த்த வேண்டும்.  சமுதாய பணியில் ஈடுபடும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com