அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடை உரிமையாளா்கள் 10 போ் மீது செவ்வாய்க்கிழமை அபராதம் வதிக்கப்பட்டது.
உடையாா்பாளையம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்குமாா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் திருநாவுக்கரசு, ராஜ், செல்வகாந்தி ஆகியோா் காவல் துறை உதவியுடன் உடையாா்பாளையம் கடைவீதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சமூக இடைவெளி பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்த கடை உரிமையாளா்கள் 10 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,000 அபராதமாக வசூலித்தனா். தொடா்ந்து அவா்களுக்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும், கைகளைக் கிருமி நாசினி கொண்டு கழுவவும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.