அரியலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 2020 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.18) காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை இணையவழி காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
கூகுள் மீட் இணைப்பில் சென்று விவசாயிகள் தங்கள் இல்லத்திலிருந்தே இணையதள வசதி கொண்ட ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி, மடிக்கணினி அல்லது கணினி வாயிலாகவும், இணையதளவசதி இல்லாத பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு அருகே இருக்கும் பொது சேவை மையங்கள் மூலமாகவும் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.