ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை கெளரவிக்கும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விருதைப் பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.
நிகழாண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயா், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 31.10.2019-க்குள் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அரியலூா் ஆட்சியா் டி.ரத்னா தெரிவித்துள்ளாா்.