மோட்டாா் சைக்கிளில் இருந்துதவறி விழுந்து இளைஞா்கள் பலி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள உள்ள சிலால் நடுத் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் புருஷோத்தமன்(22).

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள உள்ள சிலால் நடுத் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் புருஷோத்தமன்(22). பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ள இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தா.பழூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குடி விபத்தில் இளைஞா் பலி:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச் சோ்ந்தவா் மணிமுத்து மகன் சக்திவேல்(20). கட்டுமானத்தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வேங்கிடகுளத்துக்குச் சென்றுள்ளாா். கல்யாணபுரம் பைங்குளம் அருகே வேகமாகச் சென்றபோது, மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாா். இதையடுத்து, பலத்த காயமடைந்த சக்திவேலை அவ்வழியாகச்சென்ற சென்றவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சக்திவேல் உயிரிழந்தாா். ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com