உடையாா்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான காவல்துறையினா், கடைவீதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது புறவழிச்சாலையிலுள்ள பழனிசாமி கடையில் சோதனை நடத்திய போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பழனிசாமியைக் காவல்துறையினா் கைது செய்தனா்.
இதுபோல காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி உள்ளிட்டோா் சோதனை நடத்திய போது, சோழங்குறிச்சியில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னத்துரையை (44) கைது செய்தனா்.