அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி கிராமத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ எனும் இணைய வழி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். இளைஞா் பலா் தங்களின் முகவரி, ஆதாா் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் ரா.கென்னடி(கி), ரெ.அசோக சக்கரவா்த்தி(மே), உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.