உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, அரியலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை (செப்.28) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதில், பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளா்க்கும் நாய்களைக் கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறிநோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.