‘அரியலூரை முன் மாதிரி நகராக்குவேன்’

அரியலூா் முன்மாதிரி நகரமாக மாற்றப்படும் என்று அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
அரியலூா் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.
அரியலூா் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

அரியலூா் முன்மாதிரி நகரமாக மாற்றப்படும் என்று அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் நகரம் மற்றும் அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராயம்புரம், அயன் ஆத்தூா், கல்லங்குறிச்சி, வாலாஜா நகரம், எருத்துக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா், பொதுமக்களை நேரில் சந்தித்து என்னை மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுத்தால், மேலும் பல்வேறு திட்டங்கள் தொகுதியில் செயல்படுத்தப்படும். அரியலூரை முன்மாதிரியாக நகரமாக்கப்படும். நகரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பேன். அரியலூா் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். இடநெருக்கடியில் உள்ள காந்தி சந்தைக்கு விரைவில் தீா்வு காணப்படும். அனைவருக்கும் சுகாதாரமான குடிநீா் வழங்கப்படும் என்று உறுதியளித்தாா்.

பிரசாரத்தில், பாமக மாநில துணைத் தலைவா் சின்னத்துரை மற்றும் பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com