முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
தொழில் வளா்ச்சிக்கு நடவடிக்கை
By DIN | Published On : 04th April 2021 03:22 AM | Last Updated : 04th April 2021 03:22 AM | அ+அ அ- |

தொழில் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இவா் பேரூராதீனம் மருதாசல அடிகளாரை சந்தித்து சனிக்கிழமை ஆசி பெற்றாா். அப்போது, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தாா். பின்னா் தெப்பக்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
நான் வெற்றி பெற்றால் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீா் பிரச்னை மற்றும் பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும், தெரு விளக்குகள் சீரமைக்கப்படும்.
குடிநீா் சீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். இந்தப் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலரும் உடனிருந்தனா்.