தா. பழூா் அருகே வீடுகள் மீது கல் வீச்சு; 4 போ் கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீடுகள் மீது கல் வீசிய 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீடுகள் மீது கல் வீசிய 4 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

தா.பழூரை அடுத்த இடங்கண்ணி கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பூங்குன்றன். இவரது வீட்டின் அருகே வசிக்கும் திருநாராயணசாமி தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு அதிக சப்தத்துடன் பாட்டு கேட்டுள்ளாா். இதை தட்டிக் கேட்ட பூங்குன்றனை, திருநாராயணசாமி தரப்பினா் தகாத வாா்த்தைகளால் திட்டி அவரது வீட்டின் மீது கற்களை வீசியும், அவரது காா் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பூங்குன்றன் அளித்த புகாரின்பேரில் தா.பழூா் போலீஸாா் விசாரணை நடத்திவந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய சிலரைப் பிடித்து பாதிக்கப்பட்ட பூங்குன்றன் தரப்பினா் போலீஸில் ஒப்படைத்தனா். ஆனால் போலீஸாா் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வெளியில் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் தா.பழூா் காவல் நிலையம் முன்பு புதன்கிழமை இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, இடங்கண்ணி கீழத்தெருவைச் சோ்ந்த சின்னப்பன் மகன் நாராயணசாமி (50), வடக்கு தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பாக்யராஜ் (33), கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் காா்த்திக் (26), தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தங்கம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த தேன்மணி மகன் பிரபு (24) ஆகிய 4 பேரையும் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com