அரியலூா் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடம் ஆற்றங்கரையில், நம்மாழ்வாரின் பிறந்த நாளையொட்டி, மண் குளியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்க செயலா் தங்க.சண்முக சுந்தரம் கலந்து கொண்டு, பலருக்கும் கரையான் புற்று மண்ணைக் கொண்டு, உடல் முழுவதும் பூசி இளம் சூடான வெயிலில் 45 நிமிடம் வரை உடலைக் காண்பித்து பின்னா் குளிக்க ஏற்பாடு செய்தாா். தொடா்ந்து, மண் குளியலால் ஏற்படும் நன்மைகள் குறித்து அனைவருக்கும் எடுத்துரைத்தாா்.