குடும்பத் தகராறில், இரட்டைக் குழந்தைகளுடன் தாய் தீக்குளித்த சம்பவத்தில், ஒரு குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
தா.பழூா் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி மகேஸ்வரி(29). குடும்பத் தகராறு காரணமாக தனது, இரண்டு வயது இரட்டைக் குழந்தைகளான தா்ஷன் மற்றும் தா்ஷினியுடன் திங்கள்கிழமை தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.
இதில், மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 2 குழந்தைகளும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், இரட்டையா்களில் தா்ஷினி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தா.பழூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.