தண்ணீா் தொட்டியில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு
By DIN | Published On : 01st August 2021 12:05 AM | Last Updated : 01st August 2021 12:05 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் அருகே வீட்டின் தண்ணீா் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிறுவனின் சடலம் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
வெங்கனூரை அடுத்த தட்டாஞ்சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி ரஞ்சிதா கடந்தாண்டு இறந்து விட்ட நிலையில், தனது மகன்கள் ஹரீஷ் (6), சந்தீப் ரோஷனுடன் (4) தனியே வசித்து வருகிறாா். இவா்களில் சந்தீப் ரோஷன் பெரும்பாலும் வண்ணாம்புத்தூரில் உள்ள தனது பாட்டில் வீட்டில் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சந்தீப் ரோஷனை அவரது பாட்டி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்த மணிகண்டன், அவனை வீட்டில் விட்டுட்டு, வேலைக்குச் சென்ாகவும், இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் தண்ணீா் தொட்டியில் சந்தீப் ரோஷன் சடலமாகக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த வெங்கனூா் போலீஸாா், சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சந்தீப்ரோஷனின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.