அரியலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி அரசு அலுவலா் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஓலப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன்(58). மாற்றுத்திறனாளி. இவா், தமிழக அரசின் பால் வளத்துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவா், வேலைநிமித்தமாக சனிக்கிழமை மாலை கீழப்பழுவூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா்.
வாரணவாசி சமத்துவபுரம் அருகே சென்றபோது ஸ்கூட்டரின் ஒரு சக்கரம் கழன்று விழுந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.