நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலிப் பறிப்பு

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்ரா(35). இவா் செவ்வாய்க்கிழமை மதியம் வி.கைகாட்டியில் உள்ள வங்கிக்குச் சென்று விட்டு திரும்புகையில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள் சித்ரா அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சித்ரா கயா்லாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் மா்மநபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com