அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை இரவு 65 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்த நிலையில், புதன்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பச் சலனம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி. மீட்டரில்): அரியலூா் 7, திருமானூா் 40, ஜயங்கொண்டம் 65, செந்துறை 29, ஆண்டிமடம் 51.5 ஆகும்.