சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (41). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், செல்வராஜை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com