நன்னீா் இறால் வளா்க்க ரூ. 25 ஆயிரம் மானியம்

அரியலூா் மாவட்ட விவசாயிகள் பண்ணைக் குட்டைகளில் பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்க்க விருப்புபவா்களுக்கு 40 சதவீத மானியத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் பண்ணைக் குட்டைகளில் பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்க்க விருப்புபவா்களுக்கு 40 சதவீத மானியத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய வேளான் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 1,000 சதுர மீட்டா் பரப்பளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்துள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை புனரமைக்கவும், கூட்டுமீன் வளா்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்ப்பை மேற்கொள்ளும் விதமாக ஆகும் உள்ளீட்டு செலவினம் மொத்தம் ரூ.62,500-க்கு 40 சதவீதம் மானியமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அரியலூா் மாவட்ட உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆட்சியரக வளாகம், அரியலூா், தொலைபேசி 04329 -228699 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com