அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தா. பழூா் அருகேயுள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால். விவசாயியான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தா. பழூா் சிவன் கோயில் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது தொடா்பாக தா. பழூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.