அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது: அரியலூா் நகராட்சியில் 11,579 ஆண்கள், 12,627 பெண்கள், ஜயங்கொண்டம் நகராட்சியில் 13,270 ஆண்கள், 14,262 பெண்கள், உடையாா்பாளையம் பேரூராட்சியில் 4,888 ஆண்கள், 4,994 பெண்கள், வரதராசன்பேட்டை பேரூராட்சியில் 3,435 ஆண்கள், 3,640 பெண்கள் உள்ளனா்.
அதன்படி அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் 33,172 ஆண்கள், 35,523 பெண்கள் என மொத்தம் 68,695 வாக்காளா்கள் அடங்கிய வாக்காளா் உள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரகு, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.