அரியலூா் மாவட்டத்துக்கு வந்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் தனசேகரன், பொதுமக்கள் அளித்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டாா்.
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இரு நாள்கள் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், நிலுவையில் உள்ள தகவல் ஆணைய மேல் முறையீட்டு மனுக்கள் தொடா்பாக மனுதாரா்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பொது தகவல் அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையின்போது, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் துறை மற்றும் இதர துறைகளில் உள்ள 32 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.