மின் சேமிப்பு வாரவிழாவையொட்டி அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணா்வு பேரணியை மின் வாரிய அரியலூா் செயற்பொறியாளா் சாமிதுரை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில், மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் கைகளில் ஏந்தியபடி கடைவீதி வழியாக திருச்சி சாலையில் சென்று ஒற்றுமை திடலை அடைந்தனா்.
பேரணியில், உதவி செயற்பொறியாளா்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், பொன்சங்கா், உதவி பொறியாளா்கள் புவனேஸ்வரி, ரேவதி, ராஜா மற்றும் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.