மது விற்ற பெண் உள்பட 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வாணதரியன்பட்டிணம் கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலை (35), தத்தனூா் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த அன்புமணி (51), நல்லணம் கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (49) ஆகியோா் அப்பகுதிகளில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com