கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 சலவைத்தொழிலாளா்களுக்கு இலவச சலவைப் பெட்டியை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வழங்கினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சலவைத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா். மேலும் அவா்கள் இலவசமாக சலவைப் பெட்டி தரும்படி ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதையடுத்து மனுவை பரிசீலித்த ஆட்சியா், சலவைத் தொழிலாளா்கள் 32 பேருக்கும் உடனடியாக சலவைப் பெட்டியை வழங்கினாா்.