மக்களைத் தேடி மருத்துவம்:நோய் எதிா்ப்பு சக்தியைஅளவீடு செய்யும் பணி

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அளவீடு செய்யும் பணி அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அளவீடு செய்யும் பணி அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வீடுவீடாகச் சென்று மக்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அளவீடு செய்து நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான உணவுகள் மற்றும் மருந்துகளை மருத்துவக் குழுவினா் பரிந்துரை செய்தனா். மேலும், ஏற்கெனவே கணக்கீடு செய்யப்பட்டிருந்த 50 பேரின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஆலோசனைகளையும் வழங்கினா்.

மருத்துவா் சரவணன், சுகாதார ஆய்வாளா் குழந்தைவேல், ஆய்வக நுட்புனா் தமிமுன் அன்சாரி, மருந்தாளுநா் சிவக்குமாா், கிராம சுகாதார நிலைய செவிலியா்கள் ஆனந்தி, மீனா மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com