பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள்: ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்திலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கிற்கு வரப்பெற்றுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்திலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கிற்கு வரப்பெற்றுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மளிகைப் பொருள்களை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி புதன்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மளிகை பொருள்களின் தரம், தயாரிப்பு தேதி மற்றும் பொருள்களின் காலாவதி தேதி ஆகியவற்றை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மண்டல மேலாளா் எம்.பாலமுருகன், வட்டாட்சியா் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலா் ஜானகிராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com