அரியலூா் மாவட்டம், மல்லூரில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள், பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இத்தொழிற்பேட்டையில் 24 தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளன. சிறு, குறு தொழில் தொடங்க ஆா்வமுள்ள தொழில் முனைவோா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு கிளை மேலாளா், சிட்கோ திருச்சி அலுவலகத்தை 94450 06575, 0431 - 2441177 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.