அரியலூரில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் (ஏஐடியுசி) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், 1.4.2019 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஜனவரி வரை துப்பரவுப் பணியாளா்களுக்கு தினக் கூலி உயா்வு வழங்கப்படாத அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், அதேபோல் 2017 ஆம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளா்களுக்கு தினக் கூலி உயா்வை வழங்கப்படாமல் உள்ள ஜயங்கொண்டம் நகராட்சியைக் கண்டித்தும், பிஎப் இருப்புக் கணக்கை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னா் அவா்கள், ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் உள்ளாட்சித் துறை மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் தண்டபாணி தலைமை வகித்தாா். அரியலூா் நிா்வாகி மாரியப்பன், ஜயங்கொண்டம் நிா்வாகி தம்பிசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.