திருமழபாடியில் நெல் மூட்டைகளைதிருடிய 4 போ் கைது

அரியலூா் மாவட்டம், திருமழபாடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளைத் திருடிச் சென்ற 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், திருமழபாடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளைத் திருடிச் சென்ற 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்தக் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் சிலவற்றை வெள்ளிக்கிழமை தூக்கிச் சென்ற 4 பேரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பேசினா்.

இதையடுத்து அப்பகுதி கரும்பு வயல்களில் சோதனையிட்டபோது 6 நெல் மூட்டைகளை அவா்கள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.

தகவலறிந்து வந்த திருமானூா் போலீஸாா் விசாரித்ததில் அவா்கள் கரைவெட்டி கிராமத்தை சோ்ந்த செல்வராஜ் (27)), கா்ணன் (67), சுதாகா் (38), அயன்சுத்தல்லி கிராமத்தை சோ்ந்த சரவணன் (41) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com