மரத்தில் பைக் மோதிகூலித் தொழிலாளி பலி

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பனைமரத்தில் பைக் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பனைமரத்தில் பைக் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் காா்த்திக் (31), தனியாா் சிமென்ட் ஆலை ஒப்பந்த கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன.

வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் காா்த்திக் சென்று கொண்டிருந்தாா்.

ரெட்டிப்பாளையம்- நாயக்கா்பாளையம் வளைவில் திரும்பியபோது சாலையோர பனைமரத்தில் இவரது வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த காா்த்திக் உயிரிழந்தாா். விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com