அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பூச்சி மருந்து குடித்த கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்வேல் மகன் செல்வகுமாா் (19). இவா், பெரம்பலூரை அடுத்த குரும்பலூா்அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், சென்ற வாரம் செல்வகுமாா் கல்லூரிக்குச் செல்லாமல் ஊா் சுற்றி வந்துள்ளாா். இதையறிந்த செந்தில்வேல் மகனைக் கல்லூரிக்குச் செல்லுமாறு கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த செல்வகுமாா் அண்மையில் (பிப். 15) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து விட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் செல்வகுமாரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.