தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு கூட்டம்

அரியலூா் மாவட்டம் ,திருமானூா் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சாா்பில் கலந்தாலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம் ,திருமானூா் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சாா்பில் கலந்தாலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அந்த அமைப்பின் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வரும் பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 18 தொகுதிக்கு வேட்பாளா்கள் அறிமுகம் செய்யப்பட்டனா்.

தொடா்ந்து அவா்கள் 131 தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்து, அவற்றைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என வயல்களில் உள்ள நெற்கதிா்கள் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். கூட்டத்தில், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க சங்கத் தலைவா் லெனின், அமைப்பின் பொருளாளா் வரதராஜன் மற்றும் வேட்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com