அரியலூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகன் கைது

அரியலூா் மாவட்டம், சுத்தமல்லி அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகன் ஆகிய இருவரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், சுத்தமல்லி அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகன் ஆகிய இருவரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள வாத்திகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் தவசீலன் (45). இவருக்கு சுதா(42) என்ற மனைவியும், சிவராஜ் (17), சிபிராஜ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். தவசீலன் வேறொரு பெண்ணுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கேரள மாநிலத்தில் வேலை செய்து வந்த தவசீலன் 3 மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் ஊருக்கு வந்த தவசீலன், மனைவி சுதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது சுதாவும், மூத்த முகன் சிவராஜூயும் உருட்டுக் கட்டையால் தாக்கி தவசீலனைக் கொலை செய்தனா். புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மனைவி சுதா, மூத்த மகன் சிவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com