அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மீனாட்சி (75). இவா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் நடந்து சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். புகாரின் பேரில் தளவாய் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.