அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில், தேசிய பெண் குழந்தைகள் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணா்வும், கேடயம் திட்டம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சுமதி மற்றும் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வாணி மற்றும் மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் ஏராளமான பெண் குழந்தைகள் கலந்து கொண்டனா்.