கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

அரியலூா் அருகே சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் தொடா்பாக 28 ஆம் தேதி நடைபெறவுள்ள கருத்துகேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் அருகே சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் தொடா்பாக 28 ஆம் தேதி நடைபெறவுள்ள கருத்துகேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அரியலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா்களான சங்கா், தமிழ்களம் இளவரசன், வழக்குரைஞா் அறிவழகன் ஆகியோா் சோ்ந்து திங்கள்கிழமை

மாவட்ட ஆட்சியா் த. ரத்னாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: அரியலூா் அருகே இயங்கி வரும் தனியாா் சிமென்ட் ஆலை, ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தனக்குச் சொந்தமாக உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய வரும் 28 ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. 28-ஆம் தேதி தைப்பூசத் திருநாளாகும். அன்றைய தினத்தை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதை ரத்து செய்து, மற்றொரு நாளில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com