அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக மாணவரணிச் சாா்பில் திங்கள்கிழமை இரவு மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று மேலும் பேசியது: தமிழ் மொழிக்காக போராடியவா்களுக்காக வீரவணக்கம் செலுத்த தகுதியடைய கட்சி அதிமுக தான் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு அதிமுக மாணவரணி மாவட்டச் செயலா் ஓ.பி.சங்கா் தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், நகரச் செயலா் செந்தில், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.